by Staff Writer 10-08-2021 | 4:55 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம், குமாரசாமிபுரம் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு அருகிலுள்ள காணியொன்றில் தேன் எடுக்கச்சென்ற போதே இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
12 ஆம் கட்டை - குமாரசாமிபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.