குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு

by Staff Writer 10-08-2021 | 4:55 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம், குமாரசாமிபுரம் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகிலுள்ள காணியொன்றில் தேன் எடுக்கச்சென்ற போதே இவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். 12 ஆம் கட்டை - குமாரசாமிபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.