ஏறாவூரில் தாயின் கழுத்தை வெட்டி கொலை செய்த மகன் கைது 

by Staff Writer 10-08-2021 | 7:11 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் தாயின் கழுத்தை வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 65 வயதான தாயின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், 40 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாளை (11) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.