by Staff Writer 10-08-2021 | 9:17 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், வழக்கு விசாரணைக்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.