ரிஷாட் மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 09-08-2021 | 2:22 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.