ரயில்களில் சன நெரிசலை குறைக்க விசேட திட்டம்

ரயில்களில் சன நெரிசலை குறைக்க இன்று (09) முதல் விசேட திட்டம்

by Staff Writer 09-08-2021 | 9:01 AM
Colombo (News 1st) ரயில்களில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இன்று (09) முதல் விசேட நடைமுறைகள் முன்னெடுப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்களில் பயணிக்கின்ற பயணிகள், ரயில்களிலுள்ள இட வசதிகளை கருத்திற்கொண்டே பயணிக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்றைய தினம் (09), 130 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இன்று (09) முதல் வழமை போன்று கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்