Colombo (News 1st) இன்று (09) காலை 06 மணி வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,961 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஐவர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்தில் 852 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 319 பேரும் கண்டி மாவட்டத்தில் 142 பேரும் யாழ். மாவட்டத்தில் 113 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 07 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 95 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் பதுளை மாவட்டத்தில் 95 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேரும் வவுனியா மாவட்டத்தில் 36 பேரும் மன்னார் மாவட்டத்தில் 20 பேரும் புதிதாக தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் 94 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (08) அறிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்ட மரணங்களுடன், நாட்டில் இதுவரை 5,111 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.