ஆப்கனின் மேலும் 3 தலைநகரங்கள் தலிபான் வசமானது

ஆப்கனின் மேலும் 3 தலைநகரங்கள் தலிபான் வசமானது

by Chandrasekaram Chandravadani 09-08-2021 | 11:04 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் மேலும் 3 பிராந்தியங்களின் தலைநகரங்களை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை முதல் இதுவரை 5 தலைநகரங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே பொலிஸ் தலைமையகம், ஆளுநர் வளாகம், குண்டுஸ் நகரிலுள்ள சிறைச்சாலை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் நேற்று (08) அறிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் முதல் கிளர்ச்சிக்குழு மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், அனைத்து அரச தலைமையகங்களும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குண்டுஸ் பகுதியில் மாத்திரம் பெண்கள் , சிறுவர்கள் உள்ளிட்ட 14 பேரில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.