மேல் மாகாண 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அறிவிப்பு

முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத மேல் மாகாணத்திலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்காக 3 நாள் தடுப்பூசி திட்டம்

by Chandrasekaram Chandravadani 08-08-2021 | 6:31 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி திட்டத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்திலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 03 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஆகவே, 1906 என்ற இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏனைய செய்திகள்