நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதி

by Staff Writer 08-08-2021 | 12:17 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.