சிறார்களின் ஆபாச காணொளிகளை பதிவேற்றிய 10 பேர் கைது

சிறார்களின் ஆபாச காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேரை கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 08-08-2021 | 1:22 PM
Colombo (News 1st) சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அனைவரையும் அடுத்த வாரமளவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பகிர்வோரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இது போன்ற ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றுவோரை அடையாளம் காண்பதற்கு முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் (06) படல்கும்புர பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த நபரால் போலி முகப்புத்தகத்தின் ஊடாக (Facebook) சுமார் 500 ஆபாச காணொளிகள் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறார்களின் ஆபாச காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேரை கைது செய்ய நடவடிக்கை