English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Aug, 2021 | 1:22 pm
Colombo (News 1st) சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனைவரையும் அடுத்த வாரமளவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பகிர்வோரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இது போன்ற ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றுவோரை அடையாளம் காண்பதற்கு முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (06) படல்கும்புர பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த நபரால் போலி முகப்புத்தகத்தின் ஊடாக (Facebook) சுமார் 500 ஆபாச காணொளிகள் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
25 Jan, 2022 | 03:10 PM
28 Jul, 2021 | 10:13 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS