கல்கமுவயில் 3 சடலங்கள் மீட்பு

by Staff Writer 07-08-2021 | 11:40 AM
Colombo (News 1st) கல்கமுவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 வயது சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். 28 வயதான பெண் ஒருவரும், அவருடன் முறையற்ற விதத்தில் தொடர்புகளை பேணிய 28 வயதான ஆண் ஒருவரின் சடலமும், பெண்ணின் 10 வயதான மகனுடைய சடலமுமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். பெண்ணுடன் தொடர்புகளை பேணிய ஆண் நேற்றிரவு குறித்த இருவரையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கிடைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.