English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Aug, 2021 | 12:50 pm
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸின் சமூக பொலிஸ் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் சமூக பொலிஸின் தலையீட்டில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பு மாநகர எல்லைக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களை சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு வருகை தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, AstraZeneca Covishield இரண்டாவது தடுப்பூசியை இதுவரை பொற்றுக்கொள்ளாதவர்கள் இன்றும் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத்தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வோர், முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையையும் அடையாள அட்டையையும் கொண்டு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
காலை 09 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
03 Aug, 2021 | 01:13 PM
30 Jul, 2021 | 02:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS