சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு: லசந்த அழகியவண்ண வாக்குறுதி

by Staff Writer 07-08-2021 | 10:14 AM
Colombo (News 1st) சமையல் எரிவாயு பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. Laugfs Gas நிறுவனம் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமையால், 20 வீதமான நுகர்வோர் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். எனினும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை குறைப்பதற்காக Litro Gas நிறுவனம் தனது நாளாந்த விநியோகத்தை ஒரு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விலை அதிகரிக்கப்படாமையால் Laugfs Gas நிறுவனம் தனது உற்பத்தியை இடைநிறுத்தியுள்ளதாகவும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும் என லசந்த அழகியவண்ண உறுதியளித்துள்ளார்.