முள்ளியவளையில் விபத்தில் இருவர் காயம்; இருவர் கைது

by Bella Dalima 06-08-2021 | 10:45 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - முள்ளியவளை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முள்ளியவளை நகரில் தரித்து நின்ற கார் கதவினை சாரதி திறக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மறுபக்கத்தில் வேகமாக பயணித்த அம்பியுலன்ஸூடன் மோதியுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியும் அம்பியுலன்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.