அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது

by Bella Dalima 06-08-2021 | 11:09 AM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று இரத்மலானையில் கைது செய்யப்பட்டுள்ளார். Stein கலையகத்தில் இடம்பெற்ற ''மாவத்த'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது, பொருப்பனை வீதியில் அமைந்துள்ள நான்காவது பொறியியலாளர் பிரிவு இராணுவ படைத்தளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித் தடையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணத்தை அவர் வினவிய போது, அநாவசிய ஒன்றுகூடல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.