ஆர்ப்பாட்டத்தில் கைதானோருக்கு கொரோனா தொற்றில்லை

ஆர்ப்பாட்டத்தில் கைதான 44 பேருக்கும் கொரோனா தொற்றில்லை

by Bella Dalima 05-08-2021 | 10:50 AM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 44 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லையென்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் Rapid Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். online கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 25 ஆவது நாளாக தொடர்கின்றது. சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்காமையால், தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.