60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (05) முதல் மீண்டும் Sinopharm தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (05) முதல் மீண்டும் Sinopharm தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (05) முதல் மீண்டும் Sinopharm தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 6:28 pm

Colombo (News 1st) 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (05) முதல் மீண்டும் Sinopharm தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வைத்தியசாலைகள் அடங்கலாக 05 மத்திய நிலையங்களில் நாளை தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, IDH வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் விஹாரமகாதேவி பூங்கா ஆகிய இடங்களில் நாளை முதல் Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்