பொது சுகாதார பரிசோதகரை தாக்கியவர் கைது

பொது சுகாதார பரிசோதகரை தாக்கி எச்சில் உமிழ்ந்தவர் கைது

by Staff Writer 04-08-2021 | 1:31 PM
Colombo (News 1st) கிரியுல்ல - புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிற்கு கடமைக்காக சென்ற பொது சுகாதார பரிசோதகரை தாக்கி, எச்சில் உமிழ்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளரின் தந்தை, பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவரை தாக்கியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 48 வயதுடைய சந்தேகநபரே கிரியுல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.