ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவு

by Staff Writer 04-08-2021 | 3:50 PM
Colombo (News 1st) ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவுற்றுள்ளது. எதிர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். எனினும், கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.