by Staff Writer 03-08-2021 | 8:24 PM
Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் பதக்கம் வெல்வதற்கான கடைசி வாய்ப்பும் இலங்கைக்கு அற்றுப்போனது.
குதிரையேற்றத்தில் பங்கேற்ற மெதில்டா கார்ல்ஸனுக்கு (Mathilda Karlsson) போட்டித்தூரத்தை நிறைவு செய்ய முடியாமல் போனதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெதில்டா கார்ல்ஸன் இன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார்.
தகுதிச்சுற்று போட்டியில் 73 வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் மெதில்டா கார்ல்ஸனுக்கு போட்டித்தூரத்தை நிறைவு செய்ய முடியாமல் போனதுடன், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கான கடைசி வாய்ப்பும் இலங்கைக்கு அற்றுப்போனது.
தனது குதிரையான சொபேனுடன் மெதில்டா போட்டியின் ஆரம்பத்தில் வேகமாக செயற்பட்டார்.
எனினும், போட்டித்தூரத்தை நிறைவு செய்ய முடியாமல் போனதால், ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.