கும்புறுமூலையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

by Staff Writer 03-08-2021 | 7:57 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கும்புறுமூலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி, உரிமையாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 35 ஏக்கர் தனியார் காணி, கடந்த 2018 ஆம் ஆண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகுதி சுமார் 5 ஏக்கர் காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அத்துடன், உரிமையாளர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைப்பதற்காக மேலும் 7 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டது. இதற்கான ஆவணம், வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், காணி உரிமையாளர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.