இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

by Staff Writer 03-08-2021 | 7:39 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை - அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்றார். இதன்போது, ஜனாதிபதிக்கு இராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். Air Mobile படைப்பிரிவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே இதன்போது ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தினார். இது தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகத்தையும் இந்த விஜயத்தை நினைவுகூர்வதற்கான ஞாபகார்த்த சின்னத்தையும் இதன்​போது இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு வழங்கினார். இராணுவ தலைமையகத்திலுள்ள நூதனசாலை உள்ளிட்ட சில இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.