இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

by Staff Writer 03-08-2021 | 3:54 PM
Colombo (News 1st) இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,549 பேருக்கு நேற்று (02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,26,000-ஐ தாண்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 422 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,05,000 ஆக உயர்ந்துள்ளது.