by Staff Writer 02-08-2021 | 1:42 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 29 வயதுடைய மற்றுமொரு பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த மற்றுமொரு பணிப்பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.