English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Aug, 2021 | 2:04 pm
Colombo (News 1st) அரச சேவைகளை இன்று (02) முதல் வழமைபோன்று முன்னெடுக்குமாறு வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண, வலய, கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
எனினும், தாம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என 14 ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளன.
ஆசிரிய, அதிபர் தொழிங்சங்கங்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02), 22 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Aug, 2021 | 08:18 PM
23 Sep, 2023 | 06:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS