32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது
by Staff Writer 01-08-2021 | 5:55 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பிராந்தியத்தில் 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். தொண்டைமானாறு முதல் மாமுனை வரையான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 109 கிலோ 150 கிராம் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கேரள கஞ்சா தொகையானது சர்வதேச கடற்பிராந்தியத்திலிருந்து டிங்கி படகினூடாக கரைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.