by Staff Writer 01-08-2021 | 3:23 PM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஜூலை 24 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் 385 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த விபத்துகளில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ள அதேநேரம், 260 பேர் காயமடைந்துள்ளனர்.
இவற்றில் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளே பெருமளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.