எரிபொருள் திருடி விற்ற 7 பேர் கைது

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் திருடிய 7 பேர் கைது

by Staff Writer 01-08-2021 | 2:34 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து எரிபொருளைத் திருடி விற்பனை செய்த 7 பேர் வெயாங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 7 பேரும் வெயாங்கொடை - வந்துரவ ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவ பெல்வத்த, கடவத்தை, வெயாங்கொடை, பண்டாரகம, தெஹியத்தகண்டிய மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.