தொடரும் ஆசிரியர், அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு: நுவரெலியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

by Staff Writer 01-08-2021 | 7:02 PM
Colombo (News 1st) Online கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (02), 21 ஆவது நாளாக தொடர்கின்றது. தமக்கான சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதுடன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை ரத்துச் செய்யுமாறு கோரி நுவரெலியா மாவட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து நுவரெலியா நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன.