by Staff Writer 01-08-2021 | 2:56 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று (01) முதல் தனியான பல்கலைக்கழமாக இயங்கவுள்ளது.
அதன்படி இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் பதிவாகியுள்ளது.
30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
அதன் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் என்ற பெயர் நீக்கப்பட்டு இன்று (01) முதல் இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கவுள்ளது.