கடமைக்கு திரும்பல் தொடர்பில் சுற்றுநிரூபம் வௌியீடு

அரச ஊழியர்களை வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியீடு

by Staff Writer 31-07-2021 | 2:15 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (02) அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. பெருமளவான அரச ஊழியர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அரச சேவையினை வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலாளர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். இதற்கமைய, சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து சுற்றுநிரூபங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.