English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jul, 2021 | 4:54 pm
Colombo (News 1st) தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
கடல் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பரிசோதிக்கப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை 417 கடலாமைகளும் 48 டொல்பின்களும் 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதென பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்து,
கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு நிறுவனம், அதன் அதிகாரிகள் மற்றும் கெப்டன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், பொறுப்பற்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறான கருத்துக்களுக்கு தமது திணைக்களம் கண்டனம் தெரிவிப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
15 Jul, 2022 | 03:33 PM
25 Jun, 2022 | 06:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS