Pfizer மூன்றாவது டோஸ் வழங்குகிறது இஸ்ரேல்

Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல்

by Bella Dalima 30-07-2021 | 3:25 PM
Colombo (News 1st) இஸ்ரேலில் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின. Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 61 ஆவது வயதை எட்டவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog -இற்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி Michal-உம் மூன்றாவது டோஸினை பெற்றுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் முதலாவது நாடாக இஸ்ரேல் பதிவாகியுள்ளது.