இறக்குவானையில் நீல மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு

இறக்குவானையில் 80 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கம் கண்டுபிடிப்பு

by Staff Writer 30-07-2021 | 6:33 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - இறக்குவானை பகுதியில் சுமார் 80 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி அமைச்சரான ஏர்ல் குணசேகரவிற்கு உரித்தான மாணிகக் கல் சுரங்கத்திலிருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறும் ஏலத்தில் விற்பதற்காக இன்று (30) மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையிடம் குறித்த மாணிக்கக் கல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நீல மாணிக்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.