English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jul, 2021 | 3:33 pm
Colombo (News 1st) சுகாதார வழிகாட்டல்களுக்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை கடமைக்கு அழைத்தல் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில், கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் செயற்திட்டத்தினூடாக, குறிப்பிட்டளவான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பெருமளவான அரச ஊழியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அரச சேவையினை வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
20 Jul, 2022 | 09:42 PM
14 Jul, 2022 | 09:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS