COVID: இன்று 1,850 பேருக்கு தொற்று, 1,641 பேர் குணமடைவு

by Staff Writer 29-07-2021 | 8:51 PM
Colombo (News 1st) 1,850 COVID நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, 3,03,672 COVID நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,641 COVID நோயாளர்கள் இன்று குணமடைந்தனர். இதன்படி, 2,73,496 COVID நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. அம்பாறை - இறக்காமம் பிரதேச மக்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேவேளை, அம்பாறையின் சில பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியேற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது. வயதெல்லைகளின் அடிப்படையில் மாவட்டத்தின் பல இடங்களில் Sinopharm தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 மத்திய நிலையங்களில் இன்று Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டது. மூதூர், தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள 30 வயதிற்கும் மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் இந்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.