புதிய ஜனாதிபதி ஊடக மையம் திறந்து வைப்பு

by Staff Writer 29-07-2021 | 7:40 PM
Colombo (News 1st) புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஊடக மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவுள்ள பழைய சார்ட்டட் வங்கி கட்டடத்தில் புதிய ஊடக மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையில், மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்றத்தை சரியாகவும் செயற்றிறனுடனும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதே இதன் நோக்கமாகும். வாராந்தம் நடைபெறவுள்ள ஊடக சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் ஜனாதிபதி ஊடகப்பேச்சாளர் மற்றும் அரச அதிகாரிகளிடம் நேரடியாக அல்லது ஒன்லைன் மூலம் கேள்விகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.