இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

by Staff Writer 29-07-2021 | 8:27 PM
Colombo (News 1st) இந்த வருடம் ஒரே நாளில் அதிக பெறுமதியான பணம் நேற்று (28) அச்சிடப்பட்டுள்ளது. நேற்று 213.48 பில்லியன் ரூபா புழக்கத்திற்கு விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கடன் செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரநிலை உள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.