இரு தடுப்பூசிகள் செலுத்தியவர்களை அழைத்து வர அனுமதி

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வர அனுமதி - சிவில் விமான சேவைகள் அதிகார சபை

by Staff Writer 29-07-2021 | 2:12 PM
Colombo (News 1st) விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாது, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசியை ஏற்றியவர்களில் 75 பேர் மாத்திரமே ஒரு விமானத்தில் இதுவரை அழைத்து வரப்பட்டிருந்தனர்.