by Staff Writer 28-07-2021 | 6:22 PM
Colombo (News 1st) எதிர்வரும் சனிக்கிழமை (31) மாலை 7,28,460 AstraZeneca தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
COVAX திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய, இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள 4,90,000 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் AstraZeneca தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.