சர்வதேச இறைமை முறிகளுக்கு  $1B செலுத்தப்பட்டுள்ளது

சர்வதேச இறைமை முறிகளுக்காக 1 பில்லியன் டொலரை செலுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 28-07-2021 | 7:34 PM
Colombo (News 1st) சர்வதேச இறைமை முறிகளுக்காக ( International Sovereign Bonds) தமது அரசாங்கம் நேற்று (27) ஒரு பில்லியன் டொலரை செலுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொற்றை எதிர்த்து போராடுவதற்கும் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் இலங்கையர்களுக்கு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் தாம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.