Colombo (News 1st) நேற்று (27) முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் புதிதாக 1,711 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களாவர்.
எஞ்சியவர்களில், கொழும்பு மாவட்டத்தில் 481 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 310 பேரும் யாழ். மாவட்டத்தில் 51 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 12 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 72 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 109 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 09 பேரும் வவுனியா மாவட்டத்தில் இருவரும் மன்னார் மாவட்டத்தில் மூவரும் அடங்குகின்றனர்.
இதனிடையே, நாட்டில் நேற்று முன்தினம் (26) கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (27) தெரிவித்திருந்தார்.