1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்

1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்

by Chandrasekaram Chandravadani 27-07-2021 | 11:48 AM
Colombo (News 1st) இன்று (27) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,665 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 12 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிவர்களாவர். கொழும்பு மாவட்டத்தில் 273 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 268 பேரும் யாழ். மாவட்டத்தில் 149 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 14 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 32 நபர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 15 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 33 பேரும் வவுனியா மாவட்டத்தில் 22 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் (25) 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (26) அறிவித்திருந்தார்.