நாவலடி தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

யாழ். நாவலடி தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 

by Staff Writer 27-07-2021 | 11:01 AM
Colombo (News 1st) யாழ். நாவலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி - நாவலடி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடையாளந்தெரியாத சிலரால் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருந்தது. தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.