by Staff Writer 27-07-2021 | 5:33 PM
Colombo (News 1st) மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் குறித்த கடற்பிராந்தியங்களில் கடல் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை தவிர, நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் சற்று அதிகரித்துக் காணப்படக்கூடும்.
இதனால் கடல்சார் ஊழியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.