21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 25-07-2021 | 4:10 PM
Colombo (News 1st) கல்கிசை - அத்திட்டிய பகுதியில் 21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து 210 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கல்கிசை மற்றும் பிட்டிகல பகுதிகளைச் சேர்ந்த பெண்ணொருவரும் ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், ஏழு நாட்கள் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.