10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்

10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்

by Staff Writer 24-07-2021 | 2:53 PM
Colombo (News 1st) நாட்டின் 10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில் மேல் மாகாணத்திலேயே பெருமளவானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் என டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.