English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jul, 2021 | 2:21 pm
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த வாக்குமூலங்களூடாக பல விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
அதற்கமைய, அண்மையில் உயிரிழந்த சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர், ஏற்கனவே இரண்டு யுவதிகள் அங்கு தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரகரே அந்த இரண்டு யுவதிகளையும் கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
32 வயதான பெண்ணொருவரும் 22 வயதான யுவதியும் ஏற்கனவே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதி 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தொழில் புரிந்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் தாம் இரு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யுவதியின் வாக்குமூலத்திற்கு அமைய, முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். மதவாச்சி பகுதியை சேர்ந்த 44 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய, குறித்த வீட்டிற்கு சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
09 Feb, 2022 | 04:59 PM
01 Oct, 2021 | 11:47 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS