English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jul, 2021 | 10:11 pm
Colombo (News 1st) ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி இன்று 11 ஆவது நாளாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதனிடையே, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அழகியல் பாடத்திற்கான செயன்முறை பரீட்சை மேற்பார்வையிலிருந்தும் விலகுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அதிபர், ஆசிரியரின் தொழிற்சங்க போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மணிக்கூட்டு சந்தியினூடாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
ஜோன் கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்டமூலத்தை உடனடியாக நிறுத்துவதுடன், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தினர்.
30 Jun, 2022 | 05:31 PM
04 Aug, 2021 | 03:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS